சிறப்பு வாய்ந்த குருபெயர்ச்சி
ஆண்டிற்கு ஓருமுறை குருபெயர்ச்சி நடக்கிறது. இந்த நல்ல நாளில் குரு பகவான் பார்வை கிடைத்தால் கோடி நன்மை கிடைக்கும் ஆகவே நம்மில் பலர் தங்களது ராசிக்கு குருபகவான் ஆதிக்கம் வருமா? என்று எதிர்பார்ப்பார்கள்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சனிக்கிழமை 02.09.2017 அன்று குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு இடம்பெயர்கிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன்? ஒவ்வொரு ரசிக்கும் குரு பெயர்ச்சிக்கான மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்ப்போம் வாருங்கள்.

அதிக அதிஷ்டம்:
குரு பெயர்ச்சியினால் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது. இந்த ராசிகாரர்களுக்கு நீண்டநாள் தடைபட்ட திருமணம் நடக்கும், புத்ர பாக்கியம் உண்டாகும், எடுத்த முயற்சியில் வெற்றி, தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.
குறைவான அதிஷ்டம்:
ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் 50 சதவீதத்திற்கு மேல் பலன்கள் உண்டு. கோயிலிற்கு சென்று குரு பகவானை வழிபடுவதால் அதிஷ்டம் மேலும் பெருகும், மற்ற ராசிக்காரர்களுக்கு குறைந்த அளவே பலன் உள்ளது என்றாலும் வருத்தப்பட தேவை இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எல்லாருக்கும் அருள்புரியதான் செய்வார். உங்களால் முடிந்தவரை இறைவனை வழிபடுங்கள். அவர் உங்களுக்கு அனைத்தையும் தருவார்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post சிறப்பு வாய்ந்த இந்த ஆண்டின் குருபெயர்ச்சி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.





