Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் வடஆரணயேஸ்வரர்

$
0
0

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.

அரக்கர்களை அழித்து அவர்களது இரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, “நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்” என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.

அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது எனத் தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின், என்னை வழிபட்டால் தான் முழுப் பலன் கிடைக்கும்” என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து, அதன் மேல் அமைந்துள்ள “கமலத்தேர்” இங்கு தனிச் சிறப்பு.

முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்தபடியால் இத்தல இறைவன் “வடஆரணயேஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார். சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை. இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் வடஆரணயேஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles


ஈசல், சுரேஷ் பிரதீப்


ஒரு கவிஞனைப் பற்றிப் பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


அனிதா பெயரில் கல்வி உதவித்தொகைத் திட்டம்! 


19 வயது இளைஞருடன் தகாத உறவில் இருந்த 30 வயது பெண்.. கண்டித்த மாமியார் துடிக்க...


இறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி தங்கம் விலை தொடர்ந்து உயர்வு


Lucy (2014) Tamil Dubbed Movie HD 720p Watch Online


வாலியைக் கொன்ற பாவம் தீர ராமன் பூஜித்த அன்னியூர் ஈசன்


கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்


நல்ல தூக்கம் வருவதற்கு….


மருமகளுங்க மாமியாரை தெய்வமா நினைச்சா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்!


சித்தன் அருள் - 2202 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில்...


படுகளம் -13 (நாவல்)


கர்நாடகத்தில் மூடப்படும் தமிழ்ப் பள்ளிகள்- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற என்ஜினீயரிங் மாணவி: போலீஸ் விசாரணை


Sleepy Hollow (1999) Tamil Dubbed Movie HD 720p Watch Online


கடன் தீர, பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்


ஏப்ரல் 06 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.67 ; டீசல் ரூ.69.89


எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


அண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>