யந்திரத்தை வைத்து வழிப்பட்டால் பல பெரிய நடக்க முடியாத விஷயங்கள் எல்லாம் நடக்கும். யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த பூஜை முறைகளை பலவேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த யந்திர பூஜையை ஐப்பசி மாதங்களில் மட்டுமே செய்வது சிறப்பு(காலை 10-11 அல்லது மாலை 5-6 தொடங்குவது சிறப்பு).
ஆகர்ஷன பூஜை முறைகள்:
குபேரர் உருவம் அல்லது படம் எடுத்துக்கொண்டு, பூஜை அறையில் குபேர யந்திரத்தை போல் அரிசி மாவினால் கோலமிடவும், அதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும்.

மந்திரம்: ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் வித்தேஸ்வராய நமஹ.
பிறகு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ள வேண்டும்.
குறிப்பு:
விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் தனியாக வைத்து கொள்ளவும். மறு நாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுதும் செய்து வர வேண்டும், அப்படி செய்து வர குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி, செல்ல செழிப்போடு வாழ வைப்பார்.
ஐப்பசி மாதம் முடிந்ததும். ஒவ்வொரு மாதமுடிவிலும் ,ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்து வர அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
The post செல்வ செழிப்போடு வாழ குபேரர் யந்திர பூஜை appeared first on SWASTHIKTV.COM.






