தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருமங்கலக்குடி. இங்கு சிவபெருமான் பிராணநாதர் என்ற பெயருடனும், அம்பாள் மங்களநாயகி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியிருக்கிறார்கள். இத்தல இறைவனும், இறைவியும் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை, கல்விக் குறைபாடு, வேலை வாய்ப்பின்மை, குழந்தை பேறு இல்லாமை, கணவன்– மனைவி ஒற்றுமையின்மை, தொழிலில் சரிவு போன்ற கிரகங்களின் சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் களைந்து புதிய வாழ்க்கை அளிப் பதில் இத்தல இறைவன் தன்னிகரற்று விளங்குகிறார்.
The post தோஷங்கள் நீக்கும் திருமங்கலக்குடி பிராணநாதர் appeared first on SWASTHIKTV.COM.






